தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சரின் முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சரின் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமைச்சரின் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சரின் முக்கிய தகவல்!

தமிழகத்தில் சட்ட பேரவையில் ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் அறிவித்த தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் 18ஆம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த அறிக்கை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. அடுத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதன்படி இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டது. அதனால் ஏராளமானோர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். அத்துடன் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலைகளை பெற்றுள்ளனர்.

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – NPS மற்றும் OPS திட்டத்தின் முக்கிய வேறுபாடுகள் இதோ!

மேலும் பேரவையில் இது தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது, இந்த வருடத்தில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டு இதன் மூலமாக தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சரின் முக்கிய தகவல்! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!