தமிழகத்தில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் – முதல்வர் தொடங்கி வைப்பு!!
விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், அதன் முதற்கட்டமாக முதல் 25,000 மின் இணைப்புகளுக்கான ஆணையை முதல்வர் விவசாயிகளுக்கு இன்று வழங்கி உள்ளார்.
மின் இணைப்பு:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடந்தது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடந்து வந்த நிலையில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதை செயல்படுத்த முதல் கட்டமாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தீவிரமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 31,923 பேருக்கு தொற்று! 282 பேர் பலி!
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 25 ஆயிரம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளார். அதனை தொடர்ந்து மீதமுள்ள 75 ஆயிரம் இலவச இணைப்புகள் வரும் மார்ச் மாதத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.