தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1.42 லட்சம் பேர் பயணம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
சுதந்திர தின விழாவையொட்டி தொடர் விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1.42 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர். இது மட்டுமல்லாமல் நேற்று கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
வெளியூர் பயணம்:
சுதந்திரதின விழாவை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று, நாளை மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதையடுத்து, நேற்று எக்கச்சக்கமான பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டு விட்டது. வழக்கமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல தனியார் பேருந்துகளில் ரூ.800 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று தொடர் விடுமுறை காரணமாக திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல ரூ.2300 வரைக்கும் வசூல் செய்யப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.இது மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர் போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.3000 வரைக்கும் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.
75 – வது சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை – இறுதிக்கட்ட ஏற்பாடு தீவிரம்
Exams Daily Mobile App Download
இதனிடையே, பயணிகளிடம் இதுவரைக்கும் வசூலித்து வந்த கட்டணத்தை காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை எச்சரித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டுமே ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 62 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய ஊர்களுக்கு தான் அதிக அளவில் பயணிகள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக அரசு சார்பில் 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிருந்தது. ஆனால், நேற்று 357 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.