ஹாக்கி வீரர்களுக்கு ஜாக்பாட் பரிசை அறிவித்த ஒடிசா முதல்வர் – வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி!
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்திய வீர்ரகள் வெற்றி பெற்றால், ரூ.1 கோடி பரிசாகஅளிக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஹாக்கி உலகக்கோப்பை:
உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் 2023ம் ஆண்டில் ஒடிசாவில் நடக்க உள்ளது. 15 வது ஆண்கள் உலக கோப்பை போட்டிகள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக 14 வது ஹாக்கி உலக கோப்பை போட்டிகள் 2018 ம் ஆண்டு இதேபோல் ஒடிசாவில் நடத்தப்பட்டது. தற்போது பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரை சர்வதேச ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்க உள்ளது.
JEE Mains 2023 தேர்வு: ஜனவரி மாதத்திற்கு பதில் ஏப்ரல் மாதம் நடைபெறுமா? மாணவர்களின் கோரிக்கை!!
Follow our Twitter Page for More Latest News Updates
இதற்காக இன்று, ஒடிசா முதல்வர் பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி அடைந்தால், ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.