இந்தியாவில் ஒரே நாளில் 1.25 கோடி பேருக்கு தடுப்பூசி – புதிய சாதனை!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1 கோடியே 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக நாட்டில் தற்போது வரை 65 கோடியே 41 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள்:
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனவால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். எனவே தடுப்பு பணியாக முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு முன்களப் பணியாளர்களான காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் போன்றோர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
மாநில அந்தஸ்து பெறும் புதுச்சேரி, ஊக்கத்தொகை & ஊதியம் அதிகரிப்பு – முதல்வரின் சூப்பர் அறிவிப்புகள்!
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் 18 வயது மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு செலுத்தப்படுகிறது. தடுப்பூசிகள் உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மொத்தமாக இந்தியா முழுவதும் தற்போது வரை வரை 65 கோடியே 41 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதார பணியாளர்களின் கடின உழைப்பையும், பொதுமக்களின் விடாமுயற்சியையும் பாராட்டுவதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.