மாநில அரசுகளிடம் 1.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு – மத்திய அரசு!
அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேவைப்படும் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநிலங்களில் சுமார் 1.89 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கடந்த 6 மாத காலமாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மத்திய அரசு அனுமதி வழங்கிய கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்து வருவதற்கு தடுப்பூசி ஓர் முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேவைப்படும் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் மீண்டும் திறப்பு? மாநில அரசு திட்டம்!
மேலும் சில மாநிலங்களில் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் இருந்து நேரடியாகவும் கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் 2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது மாநில/யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி கையிருப்பு குறித்து மத்திய அரசு முழு விவரங்கள் கூடிய தகவலை தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி நேரடியாக கொள்முதல் செய்தது உட்பட மொத்தம் 30,33,27,440 தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் தடுப்பூசிகள் வீணானவை உட்பட மொத்தம் 28,43,40,936 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் தற்போது 1,89,86,504 தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு அடுத்த 3 நாட்களில் 21,05,010 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.