தமிழகத்தில் ‘இந்த’ 2 மாவட்டங்களுக்கு செப்.08 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 'இந்த' 2 மாவட்டங்களுக்கு செப்.08 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் 'இந்த' 2 மாவட்டங்களுக்கு செப்.08 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ‘இந்த’ 2 மாவட்டங்களுக்கு செப்.08 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் பொதுவாக மாவட்டத்தில் கொண்டாடப்படும் கோவில் திருவிழா, பண்டிகை நாட்களில் பொதுமக்கள் வெகு சிறப்பாக கொண்டாட ஏதுவாக தமிழக அரசு பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது ஆரோக்கிய மாதா திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். மேலும் தற்போது வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 8ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்னை மரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டு பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நாளான வருகிற செப்டம்பர் 8ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களும் இந்த விடுமுறை பொருந்தும். இதற்கு மாற்று வேலை நாளாக செப்டம்பர் 24ம் தேதி வியாழக்கிழமை அன்று நடத்த பரிந்துரை அளித்துள்ளார்.

SBI வங்கியின் பேலன்ஸ் & மினி ஸ்டேட்மெண்ட் அறிய எளிய முறை – வாட்ஸ்அப் சேவை!

இதனை தொடர்ந்து, கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் முக்கிய பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வருகிற செப்டம்பர் 8ம் தேதி அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற செப்டம்பர் 17ம் தேதி அன்று மாற்று வேலை நாளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!