கொரோனாவால் பல பாதிப்புகளை மாணவர்களும் சந்தித்து வருகின்றனர். அனைவரும் எதிர்பார்த்த சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மதிப்பெண்கள் எப்படி வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த கோரிக்கை வைக்க பட்டது. அதனால் நேற்று உச்ச நீதி மன்றம் இந்த தேர்வுகளை ரத்து செய்தது.
மதிப்பெண்கள் எப்படி வழங்கபடும்:
இந்தநிலையில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 15 தேதிகுள் வெளியிட படும் என்று தெரிவித்து உள்ளார், தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ். மேலும் அவர் கூறியதாவது ” 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை கூட்ட விரும்பினால் விருப்ப பாடங்களில் பங்கேற்கலாம் என்றும் அவர்கள் அதில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களாக கருதப்படும்.
ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீட்டு செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலுவையில் உள்ள பாடங்களுக்கான முடிவுகளை வாரியம் தயாரிக்கும். போர்டு தேர்வு முடிவுகள் ஜூலை 15 க்குள் அறிவிக்கப்படும். சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ இரு தேர்வு அமைப்புகளும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வாரியத் தேர்வுகளின் முடிவுகளை ஜூலை நடுப்பகுதியில் அறிவிக்கும் ” என்று கூறினார்.